Breaking News

ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து எதிரொலி; மீன் சந்தைகளில் அலைமோதிய கூட்டம்: வரத்து குறைவால் மீன்களின் விலை உயர்வு

சென்னை: ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், காசிமேடு, கலங்கரை விளக்கம், சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. வரத்து குறைவாக இருந்ததால் மீன்களின் விலை உயர்ந்திருந்தது.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இதனால், சனிக்கிழமைகளில் மீன், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், இரவுநேரம், ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CqQMIoNGW
via

No comments