Breaking News

தமிழகத்தில் கரோனா படிப்படியாக குறைந்து வருகிறது; இன்னும் 2 வாரம் மிகக் கவனமுடன் இருக்க வேண்டும்: பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை செயலர் வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், பொதுமக்கள் இன்னும் 2 வாரம் மிகக் கவனமுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டதையொட்டி, சென்னை அசோக் நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். மாநகர நல அலுவலர் ஜெகதீசன், முதன்மைக் கல்வி அலுவலர் சா.மார்ஸ், தலைமையாசிரியர் ரா.சி சரஸ்வதி ஆகியோர் உடன் இருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZxHQ9myDb
via

No comments