Breaking News

ராணுவ தளவாடங்கள் 68% உள்நாட்டில் கொள்முதல்; நாட்டின் வளர்ச்சி, தொழில்துறையின் உற்பத்தி மேம்பாட்டுக்கு உதவும் - ‘மேக்’ நிறுவன தலைவர் வரவேற்பு

கோவை: அரசு நிர்வாகம் மட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் உதவியுடன் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதிலும், சுயசார்பு திட்டத்தின்கீழ் தொழில்துறையை ஊக்குவிப்பதிலும் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. மத்திய அரசின் நிலைப்பாடு நேற்றைய நிதிநிலை அறிக்கையிலும் எதிரொலித்தது. நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய ராணுவ தளவாடங்கள் கொள்முதல் உள்நாட்டில் 68 சதவீதம் வரை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், உள்நாட்டில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி மற்றும் தொழில்நுட்பங்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு, ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி, தொழில்நுட்ப பங்களிப்பு சார்ந்த தொழில்துறையினரிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

கோவையில் செயல்படும் ‘மேக்’ நிறுவனத்தின் மூலம் ஏவுகணைக்கு தேவையான தொழில்நுட்ப பங்களிப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் அறிவிப்பு தொடர்பாக, ‘மேக்’ நிறுவனத்தின் தலைவர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/H25vdoTeF
via

No comments