மக்களின் ஏகோபித்த ஆதரவோடு தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும்: முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி நம்பிக்கை
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாள் விழாவை அதிமுகவினர் நேற்று கொண்டாடினர். வாணியம் பாடியில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதேபோல, நாட்றாம்பள்ளி அடுத்த தும்பேரி, வடக்குப்பட்டு, அம்பலூர், திம்மாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஜெயலலிதா பிறந்த நாளை அதிமுகவினர் கொண்டாடினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/u31zXID
via
No comments