Breaking News

பென்னிகுக் சிலையை திறந்து வைக்க லண்டன் வருமாறு முதல்வருக்கு அழைப்பு

சென்னை: முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக் சிலையை லண்டனில் திறந்துவைக்க வருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பென்னிகுக் ஆராய்ச்சியாளர் சந்தான பீர் ஒளி அழைப்பு விடுத்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜன.16-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், ‘முல்லை பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக் செய்த தியாகத்தைபோற்றும் வகையில், இங்கிலாந்து நாட்டில்அவரது சொந்த ஊரில் அவருக்கு சிலைஅமைக்கப்படும்’ என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TVxR7H4
via

No comments