Breaking News

டாஸ்மாக் கடைகள் வைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மாவட்ட ஆட்சியர்கள் பரிசீலிக்க விதிகளில் திருத்தம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

சென்னை: டாஸ்மாக் கடைகள் வைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், மாவட்ட ஆட்சியர்கள் பரிசீலிக்கும் வகையில் மதுபான சில்லரை விற்பனை விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளதாக தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

டாஸ்மாக் மதுபானக்கடைகள் எங்கள் கிராமத்தில் வேண்டாம் என கிராம பஞ்சாயத்துகளில் தீர்மானம் நிறைவேற்றினால் அதை செயல்படுத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றம் இருவேறு தீர்ப்புகளை பிறப்பித்தது. அதையடுத்து இதுதொடர்பான வழக்குகள் 3 நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வுக்கு மாற்றப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/N54VUiu
via

No comments