Breaking News

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்: போலீஸாருக்கு மாநகர காவல் ஆணையர் உத்தரவு

சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், பிரச்சினைக்குரிய இடங்களுக்கு போலீஸார் நேரடியாக செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு அளவில் செய்துள்ளது. அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் பணம் கொடுத்து வாக்காளர்களை கவர்வதை தடுக்க தேர்தல் ஆணையம் பறக்கும் படைகளை அமைத்து கண்காணித்து வருகிறது. அவர்களுடன் இணைந்து போலீஸாரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OcHviqC
via

No comments