Breaking News

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் தொல்லியல் துறை கட்டுமானம் மேற்கொள்ள தடை

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், முதலாம்ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. யுனெஸ்கோவால் புராதனச் சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்த கோயிலின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில்கட்டுமானங்கள் மேற்கொள்ள தடைவிதிக்கக் கோரி, கும்பகோணத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலகுரு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RW71Qjz
via

No comments