Breaking News

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளின் வீடுகளுக்கே சென்று அமைச்சர்கள் சமாதானம்: கூட்டுறவு சங்கத் தேர்தலில் வாய்ப்பு அளிப்பதாக உறுதி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள திமுக நிர்வாகிகளின் வீடுகளுக்கே சென்று, அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள் அவர்களை சமாதானப்படுத்தி வருகின்றனர். மேலும், கூட்டுறவு சங்கத் தேர்தல் உள்ளிட்டவைகளில் வாய்ப்பு அளிப்பதாக உறுதி யளித்து வருகின்றனர்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் மொத்தமுள்ள 12,838 வார்டுகளுக்கான தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடக்கவுள்ளதால், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MuHCbvN
via

No comments