Breaking News

2 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை சித்திரை திருவிழா கோலாகலம் - `கோவிந்தா...கோவிந்தா' முழக்கத்துடன் பல லட்சம் பக்தர்கள் தரிசனம்

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நேற்று நடந்தது. பச்சைப் பட்டு உடுத்தி கள்ளழகர் வைகையில் எழுந்தருளினார். அப்போது பல லட்சக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா.. கோவிந்தா...' முழக்கமிட்டு கள்ளழகரை தரிசித்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம், தீர்த்தத்துடன் நேற்று நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து மதுரை அருகே உள்ள அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.12-ம் தேதி தொடங்கியது. ஏப்.14-ம் தேதி மாலை அழகர்கோவிலில் இருந்து சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் கோலத்தில் மதுரைக்குப் புறப்பட்டார். ஏப்.15-ல் மதுரை மூன்றுமாவடியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் எதிர்சேவை நடைபெற்றது. அன்று இரவு 9.30 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RorvFzN
via

No comments