Breaking News

இலங்கையில் அதிகரிக்கும் நெருக்கடி: 4 கைக்குழந்தைகளுடன் 11 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

ராமேசுவரம்: இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், பட்டினிச்சாவு ஏற்படும் அச்சத்தால் 4 கைக்குழந்தைகளுடன் 11 பேர் அகதிகளாக நேற்று தனுஷ்கோடிக்கு வந்தனர்.

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். உணவுகூட கிடைக்காமல் ஏராளமானோர் திண்டாடுகின்றனர். அரசுக்கு எதிராக மக்கள் தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FXIhp1e
via

No comments