Breaking News

பெட்ரோல், டீசல் மீதான வரியை அதிகம் உயர்த்தியது மத்திய அரசு: பிரதமரின் புகாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்

சென்னை: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மாநில அரசுகளுடன் பகிர வேண்டும் என்பதால் அதை குறைத்து, மாநில அரசுகளுக்கான வருவாயில் மத்திய அரசு கைவைத்தது. ஆனால், மத்திய தல வரி, தல மேல் வரியை மாநில அரசுகளுடன் பகிர வேண்டியது இல்லை என்பதால், அவற்றை மிக கடுமையாக உயர்த்தி பல லட்சம் கோடி வருவாயையும் மத்திய அரசு தனதாக்கிக் கொண்டது என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி 27-ம் தேதி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘‘எரிபொருட்களுக்கான வாட் வரியை மத்திய அரசு கடந்த நவம்பரில் குறைத்தும், சில மாநிலங்கள் வாட் வரியை குறைக்கவில்லை. தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநில அரசுகள் வாட் வரியை குறைக்க முன்வர வேண்டும்’ என்று கூறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kaT3G4Z
via

No comments