Breaking News

ஆளுநர் - முதல்வர் இடையோன மோதல் போக்கு மாநிலத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் - தெலங்கானா ஆளுநர் தமிழிசை கருத்து

சென்னை: ஆளுநர் - முதல்வர் இடையே மோதல் போக்கு இருந்தால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா ஆளுநராக 2 ஆண்டுகளும் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக ஓராண்டும் தமிழிசை சவுந்தரராஜன் பணியாற்றியது குறித்த நூல் வெளியீட்டு விழா, சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. நூலை தமிழிசை வெளியிட, அவரது கணவர் சவுந்தரராஜன் பெற்றுக்கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jwPrzD5
via

No comments