Breaking News

மெகா தடுப்பூசி முகாம் மீண்டும் தொடக்கம் - 28-ம் கட்ட முகாமில் 12.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி

சென்னை: தமிழகத்தில் மெகா கரோனா தடுப்பூசி முகாம் நேற்று மீண்டும் தொடங்கியது. தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்ற 28-வது முகாமில் 12.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்தும் வகையில், வாரம்தோறும் சனிக்கிழமையில் 50 ஆயிரம் இடங்களில் மெகா முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன. இதுவரை 27 மெகா கரோனாதடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. 93 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AXK1ymG
via

No comments