Breaking News

நூல் விலை உயர்வை குறைக்க வேண்டும் - மத்திய நிதியமைச்சரிடம் நேரில் வலியுறுத்திய தமிழக எம்.பிக்கள்

புதுடெல்லி: பருத்தி நூல் விலையை குறைக்க வலியுறுத்தி கனிமொழி தலைமையில் எம்பிக்கள் குழு இன்று மத்திய நிதியமைச்சரை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உட்பட தமிழக எம்.பிக்கள் நால்வர் உடன் இருந்தனர்.

சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, திமுக மக்களவை அவைக்குழு துணைத் தலைவரான கனிமொழி: கரூரிலும், திருப்பூரிலும் பின்னலாடை தொழில் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஜவுளித் தொழில் என்பது விவசாயத்திற்கு அடுத்து அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் முக்கியமான தொழிலாகும். இதில் தற்போது பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/L8vnw7X
via

No comments