IPL 2022 | கடைசி பந்தில் லக்னோ த்ரில் வெற்றி - 2 ரன்களில் பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறிய கொல்கத்தா

ஐபிஎல் 66வது ஆட்டத்தில் பரபரப்பான இறுதி ஓவரில் கடைசி பந்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.
முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து சிறப்பான துவக்கம் கொடுத்தது. அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் கேஎல் ராகுல் மற்றும் குயின்டன் டி காக் இருவரும் சிறப்பாக விளையாடினர். இருவரையும் கடைசி ஓவர் வரை பிடிக்க முடியவில்லை. குறிப்பாக இம்முறை குயின்டன் டி காக் களத்தில் ருத்ரதாண்டவம் ஆடினார். கொல்கத்தா பவுலிங்கை நாலாபுறமும் சிக்ஸ் மற்றும் பவுண்டரிகளாக விளாசினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tavkQ7J
No comments