சமஸ்கிருத உறுதிமொழி விவகாரம்: திட்டமிட்டே பலிகடா ஆக்கப்பட்டாரா மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன்?

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை ‘டீன்’ ரெத்தினவேலு, மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழாவில் நடந்த சமஸ்கிருத மொழி உறுதிமொழி ஏற்பு விவகாரத்தால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் சென்னை அரசு மருத்துவமனைக்கு அடுத்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த அரசு ராாஜாஜி மருத்துவமனை ‘டீன்’னாக ரெத்தினவேலு இருந்தார். இவர், கரோனா தொற்று பரவ ஆரம்பித்த போது சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி ‘டீன்’னாக பணிபுரிந்து வந்தார். அப்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா சிகிச்சையில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதால் அவசரம் அவசரமாக ரெத்தினவேலு மதுரை அரசு மருத்துவமனை ‘டீன்’னாக நியமிக்கப்பட்டார். அவர், தன்னை மதுரை அரசு மருத்துவமனை ‘டீன்’னாக நியமித்தது சரியானது தான் என்பதை நிரூபிக்கும் வகையில் தினமும் காலையும், மாலையும் கவச உடைகள் அணிந்து ‘கரோனா’ வார்டுகளுக்கு சென்று நோயாளிகளுக்கு ஆறுதல் கூறியதோடு, அவர்கள் குறைகளை கேட்டரிந்து அந்த வார்டுகளில் பணிபுரியும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை உற்சாகப்படுத்தியும் வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ur2E0jx
via
No comments