மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளது திமுக - எடப்பாடி பழனிசாமி
கள்ளக்குறிச்சி: மக்களை ஏமாற்றி வந்துள்ள திமுக இனி எந்த காலத்திலும் ஆட்சிக்கு வரப் போவதில்லை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மே தினத்தை ஒட்டி அண்ணா தொழிற்சங்கப்பேரவை சார்பில் கள்ளக்குறிச்சியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, "அதிமுக ஆட்சியின் போது தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் கடுமையான மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியில் சரியான திட்டமிடல் இல்லை. எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மின்வெட்டு ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் விவசாயிகள் தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். எனவே இனி திமுக எந்தக் காலத்திலும் ஆட்சிக்கு வரமுடியாது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Vz0qbux
via
Post Comment
No comments