Breaking News

இரண்டரை மாதங்களுக்குப் பின் தினசரி கரோனா பாதிப்பு 100-ஐ கடந்தது - தமிழகத்தில் புதிதாக 139 பேருக்கு தொற்று

சென்னை: தமிழகத்தில் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு தினசரி கரோனா பாதிப்பு 100-ஐக் கடந்துள்ளது. நேற்று புதிதாக 139 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 96, பெண்கள் 43 என மொத்தம் 139 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அமெரிக்காவில் இருந்து வந்த இருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 59, செங்கல்பட்டில் 58 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 55,613 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 34 லட்சத்து 16,959 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 52 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yI5g6Ss
via

No comments