நிலுவையில் உள்ள 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்த பின்னணி

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர்மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்துப் பேசினார் அப்போது, நிலுவையில் உள்ள சித்த மருத்துவ பல்கலைக்கழகம் உள்ளிட்ட 21 சட்ட மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தினார். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதற்காக நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரும் சட்ட மசோதா, கடந்த ஆண்டு செப்டம்பரில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் வைத்திருந்தார். இதனால், ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புமாறு வலியுறுத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zSVwIOl
via
No comments