பரந்தூர் புதிய விமான நிலையம் | கையகப்படுத்தும் நிலத்துக்கு சந்தை மதிப்பில் 3.5 மடங்கு அதிக தொகை - அமைச்சர்கள் தகவல்

சென்னை: பரந்தூரில் புதிய விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு சந்தை மதிப்பில் 3.5 மடங்கு அதிக தொகை வழங்கப்படும் என்று அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். மேலும், சுற்றுவட்டாரப் பகுதியில் இலவச நிலம், அதில் வீடு கட்ட பணம், குடும்பத்தில் தகுதியானவருக்கு அரசு சார்பில் வேலை வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புதிய விமான நிலையத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் குறித்து, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று விளக்கினர். அப்போது அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JZU1Qtp
via
No comments