அதிமுக அலுவலக மோதல் விவகாரம் - ஓபிஎஸ் மீது 7 பிரிவுகளின்கீழ் வழக்கு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதலின்போது ஆவணங்களை எடுத்துச் சென்றதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த புகாரின்பேரில், ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் மீது 7 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமையை ஏற்படுத்தும் நோக்கில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம், கடந்த மாதம் 11-ம் தேதி வானகரத்தில் நடைபெற்றது. அந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/F12duw7
via
No comments