Breaking News

கல்லூரி மாணவர்கள் இடையே ஆயுத கலாசாரத்தை அனுமதிக்க முடியாது: ரயில்வே காவல்துறை கூடுதல் டிஜிபி வனிதா

மதுரை: கல்லூரி மாணவர்கள் இடையே ஆயுதக் கலாசாரத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என டிஜிபி வனிதா எச்சரித்துள்ளார்.

மதுரை ரயில்வே காவல் உட்கோட்டத்தில் வேலை பளு காரணமாக காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்குதல், பொதுமக்களை எவ்வாறு அணுகுவது உள்ளிட்ட உளவியல் சார்ந்த ஆலோசனை வழங்கும் கலந்துரையாடல் மதுரை ரயில்வே கோட்ட அலுவலக பகுதியில் வியாழக்கிழமை நடந்தது. ரயில்வே இருப்புப் பாதை காவல்துறை கூடுதல் இயக்குநர் வனிதா தலைமை வகித்தார். ரயில்வே காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மதுரை உட்கோட்டத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காவலர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர் இதில் பங்கேற்றனர். உளவியல் மருத்துவர் ஸ்ரீதேவி கண்ணன், ரயில்வே ஆய்வாளர் குருசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eXrcAhd
via

No comments