‘‘முழுமையான பார்வை பெற்ற நாடாக இந்தியா உருவாக வேண்டும்’’ - ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி: 37வது கண் தான வழிப்புணர்வு விழாவையொட்டி புதுச்சேரி தவளக்குப்பத்தில் உள்ள கண் மருத்துவமணையில் கண் தான விழிப்புணர்வு முகாம் இன்று மாலை நடைபெற்றது. துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முகாமை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், தன்னார்வலர்கள், தன்னார்வ அமைப்புகள் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. கண் தானம் குறித்த குறும்படமும் திரையிடப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7wrtICZ
via
No comments