Breaking News

தீபாவளி கூட்ட நெரிசலில் ஊடுருவும் சீசன் திருடர்களுக்கு 10 முக அடையாள கேமரா மூலம் வலை - ‘ட்ரோன் கேமரா’ மூலமும் கோபுரம் அமைத்தும் கண்காணிப்பு

சென்னை: தீபாவளி விற்பனை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கூட்ட நெரிசலில் ஊடுருவும் சீசன் திருடர்களுக்கு 'முக அடையாள கேமரா' மூலம் போலீஸார் வலை விரித்துள்ளனர். மேலும், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டட்ரோன் மூலமும் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு தியாகராயநகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு, திருவான்மியூர், பெரம்பூர் உட்பட முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

தீபாவளிக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால் புத்தாடை வாங்கவும், வீட்டுக்குத் தேவையான பொருட்களைத் தேர்வு செய்யவும் சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இந்த நெரிசலைப் பயன்படுத்தி ஜேப் படி, வழிப்பறி திருடர்கள் புகுந்து கைவரிசை காட்டும் சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறும். அண்மையில் கூட தியாகராயநகர், ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபலமான ஜவுளிக்கடை ஒன்றில் பெண்கள் பிரிவில் புடவை எடுத்துக் கொண்டிருந்த ஆவடி, கோவிந்தராஜபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் மணிபர்ஸ் திருடப்பட்டது. இத்திருட்டில் ஈடுபட்ட குன்றத்தூர் பாலாஜி நகரைச்சேர்ந்த சாந்தி என்ற பெண்ணை மாம்பலம் போலீஸார் கடந்த வாரம் கைது செய்தனர். இவர் மேலும் 2 பேரிடம் செல்போன் திருட்டில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qD10IrL
via

No comments