Breaking News

சென்னையில் தடையை மீறி அதிமுகவினர் உண்ணாவிரதம் | பழனிசாமி உள்ளிட்ட 1,300 பேர் கைது - கட்சியை உடைக்க சதி செய்வதாக ஆவேசம்

சென்னை: சென்னையில் தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உள்பட அதிமுகவினர் 1,300 பேர் கைது செய்யப்பட்டனர். கட்சியை உடைக்க சதி நடப்பதாக போராட்டத்தின்போது இபிஎஸ் ஆவேசத்துடன் தெரிவித்தார்.

சட்டப்பேரவை துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி, ஆர்.பி.உதயகுமாரை அப்பொறுப்பில் அமர்த்தியுள்ளதாக, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலர் பழனிசாமி, சட்டப்பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்திருந்தார். இதேபோல, ஓபிஎஸ் தரப்பிலும், கடிதம் அளிக்கப்பட்டது. ஆனால், பேரவைக் கூட்டத் தொடரில், எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கான இருக்
கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்துள்ளார். இதைக் கண்டித்து பழனிசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டதால் பேரவையிலிருந்து வெளியேற்றப்பட் டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3je7k95
via

No comments