Breaking News

தேவர் குருபூஜையில் பங்கேற்க அக்.30-ல் பிரதமர் பசும்பொன் வருகை - நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அக். 30-ம் தேதி நடைபெறும் தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா அக்.30-ல் நடைபெறும். இந்த நாளில் அரசு சார்பில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது வழக்கம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nXCwsuO
via

No comments