Breaking News

தஞ்சை பெரிய கோயிலின் பிரகாரத்தில் உள்ள இந்திரன் கோயிலை திறக்கக்கோரி வழக்கு

மதுரை: தஞ்சை பெரிய கோயில் பிரகாரத்தில் உள்ள இந்திரன் கோயிலை திறக்கக்கோரிய வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கூரியூரைச் சேர்ந்த அழகர்சாமி பாண்டியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தஞ்சை பெருவுடையார் கோயில் பிரகாரத்தில் 11ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்திரன் கோயில் அமைந்துள்ளது. ஆனால், அந்தக்கோயில் பொதுமக்களின் வழிபாட்டிற்கு இதுவரை திறக்கவில்லை. சங்க காலம் முதல் இந்திரன் வழிபாடு முறை உள்ளது. ஆனால், இந்திரன் கோயிலில் வழிபாடும், பூசைகளும் நடக்கவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/D4NQVcj
via

No comments