Breaking News

சேமிப்பும், சரியான முதலீடும் அவசியம்; அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு தொடங்குங்கள்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: உலக சிக்கன நாளையொட்டி அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கை தொடங்குங்கள் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலக சிக்கன நாள் இன்று (அக்.30) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது.

சிக்கனம் என்பது தனிப்பட்ட வளர்ச்சியை மட்டுமின்றி, ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்தும் செயல். பணத்தை மட்டுமல்லாமல், பொருட்கள், இயற்கை வளங்களையும் பொறுப்புடன் செலவழிப்பதில் சிக்கனம் தொடங்குகிறது. ‘பணத்தை தண்ணீராய் செலவழித்தல்’ என்ற உவமையில் இருந்து மாறுபட்டு, ‘தண்ணீரை பணம்போல செலவழிக்கும்’ கட்டாயத்தை உலகமே இன்று உணர்ந்திருக்கிறது. ‘குறைந்தபட்ச தேவைகளுடனான வாழ்க்கை’ என்கிற கருத்தியல் விரைவாக பரவி வருகிறது. ஒரு பொருளை, ‘தேவையா?’என்று பலமுறை சிந்தித்து வாங்குவதில் சிக்கனம் தொடங்குகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GSeKauP
via

No comments