Breaking News

மதுரை | நிரம்பி வழியும் குப்பை தொட்டிகளால் தூர்நாற்றத்தை நுகர்ந்தவாறே பள்ளி செல்லும் மாணவர்கள்

மதுரை: பள்ளிகள் முன் வைக்கப்படும் குப்பை தொட்டிகளில் நிரம்பும் குப்பைகள் அள்ளப்படாமல் இருப்பதால் மதுரையில் பல இடங்களில் பள்ளி குழந்தைகள் தினமும் தூர்நாற்றத்தை நுகர்ந்தவாறே பள்ளிக்கு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி ஆணையாளராக விசாகன் இருந்தபோது குப்பை தொட்டிகள் இல்லாத நகரம் உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. பொது இடங்களில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு வீடுகள் தோறும் நேரடியாக சென்று தூய்மைப்பணியாளர்கள் சேரித்தனர். சேகரித்த குப்பைகளை தரம்பிரித்து அந்த வார்டு பகுதிகளிலே உள்ள உரக்கிடங்கிற்கு கொண்டு அங்கேயே குப்பைகளை அழித்து உரமாக்கப்பட்டது. பொது இடங்கள், வைகை ஆற்றில் குப்பைகள் கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த திட்டம் ஒரளவு வெற்றிகரமாக செயல்பட்டநிலையில் பொது இடங்கள், சாலைகளில் குப்பை தொட்டிகளும், குப்பைகளும் இல்லாமல் தூய்மையாக காணும்நிலை தொடங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7KQkh8Z
via

No comments