Breaking News

மதுரை | சக்கரம் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்து: சிலிண்டர்கள் சாலையில் உருண்டதால் பொதுமக்கள் பதற்றம்

விருதுநகர்: மதுரையில் இருந்து நான்கு வழிச்சாலையில் கேஸ் சிலிண்டர்கள் ஏற்றிச் சென்று கொண்டிருந்த வேனின் சக்கரம் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேஸ் சிலிண்டர்கள் சாலையில் உருண்டு ஓடியதால் பொதுமக்கள் பதற்றமடைந்து சிதறி ஓடினர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரிலிருந்து கேஸ் நிரப்பப்பட்ட சுமார் 50 வணிக பயண்பாட்டுக்கான சிலிண்டர்களுடன் வேன் ஒன்று விருதுநகரில் உள்ள அழகாபுரி சாலை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் இருக்கும் தனியார் கேஸ் ஏஜென்ஸிக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்து கொண்டிருந்தது. வேனை பாலமேடு பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் (37) என்பவர் ஓட்டி வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SmuYRIL
via

No comments