Breaking News

T20 WC | அரை இறுதிக்கு முன்னேறுவதற்கு இந்தியாவுக்கு கட்டாய வெற்றி தேவை - ஜிம்பாப்வே அணியுடன் இன்று மோதல்

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று குரூப் 2-ல் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று ஜிம்பாப்வே அணியுடன் மெல்பர்ன் மைதானத்தில் மோதுகிறது.

அரை இறுதிக்கு முன்னேற வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் இந்திய அணி களமிறங்குகிறது. மெல்பர்ன் மைதானத்தில்தான் இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை தோற்கடித்திருந்தது. அந்த ஆட்டத்தில் விராட் கோலி வியக்கத்தக்க வகையில் விளையாடி 53 பந்துகளில் 82 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்திருந்தார். அவரிடம் இருந்தும், சூர்யகுமார் யாதவிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fgFEKxn

No comments