Breaking News

சென்னையில் 18-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்: உயிரிழந்தோருக்கு அரசியல் தலைவர்கள், மீனவ அமைப்புகள் மரியாதை

சென்னை: சென்னையில் 18-ம் ஆண்டு சுனாமிநினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி மெரினா மற்றும் காசிமேடு கடற்கரை பகுதிகளில் சுனாமியால் உயிரிழந்தோருக்கு அரசியல் கட்சிகள், மீனவஅமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.

தமிழக கடலோரப் பகுதிகளில் கடந்த 2004-ம் ஆண்டு டிச.26-ம்தேதி சுனாமி தாக்கியதைத் தொடர்ந்து, கடலோர மாவட்டங்களில் ஏராளமான மீனவர்கள் உயிரிழந்தனர். சென்னை கடலோரப் பகுதிகளிலும் உயிரிழப்புகள் அதிகமாக இருந்தன. இதனால், ஒவ்வோர்ஆண்டும் டிச.26-ம் தேதி சுனாமிநினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vrZJckb
via

No comments