Breaking News

''கடனை திரும்ப செலுத்தவில்லை'' - கடலூர் எம்பி-யின் ரூ.45 கோடி சொத்தை வங்கி கையகப்படுத்தியது

விருத்தாசலம்: கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் வங்கியில் பெற்ற கடனை திரும்ப செலுத்தாததால் பண்ருட்டியில் இருந்த ரூ.45 கோடி மதிப்பிலான சொத்துக்களை தமிழ்நாடு மெர்க்ண்டைல் வங்கி நேற்று கையகப்படுத்தியது.

கடலூர் மக்களவை உறுப்பினரான டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ், முந்திரி உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்து, அவற்றை ஏற்றுபதி செய்வதோடு, சில்லரை விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், பண்ருட்டி சென்னை சாலையில், வஉசி நகரில் காயத்ரி கேஷ்யூஸ் இன்டஸ்டரீ என்ற பெயரில் உள்ள 3 ஏக்கர் நிலத்தை, தமிழ்நாடு மெர்க்ண்டைல் வங்கிக் கிளையில் கடந்த 10 வருடங்களுக்கு முன் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார். அந்த பணத்தை முறையாக திரும்ப செலுத்தாததால், அவரது வங்கி நிர்வாகம் பலமுறை நோட்டீஸ் அளித்தும் அவர் அதை பொருட்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JKZNkaA
via

No comments