Breaking News

அசாம் செல்லும் ரயிலில் மாணவ, மாணவிகளின் முன்பதிவு இடங்களை ஆக்கிரமித்த வட மாநிலத்தவர்கள்

சென்னை: அசாம் மாநிலம் குவஹாட்டியில் சாரணர் சாரணியர் மற்றும் என்சிசி படையைச் சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து சாரணர் இயக்கம் மற்றும் என்சிசி மாணவ, மாணவிகளில் ஒரு பிரிவினர், பெங்களூருவில் இருந்து அசாம் மாநிலம் நியூ தின்சுகியாவுக்கு செல்லும் விரைவு ரயிலில் முன்பதிவு செய்திருந்தனர்.

விரைவு ரயிலில், பெரம்பூரிலிருந்து 200 மாணவ, மாணவிகளும், திருவொற்றியூரில் இருந்து 36 மாணவர்களும் முன்பதிவு செய்திருந்தனர். மாணவ, மாணவிகளுக்கு அந்த ரயிலின் எஸ்-3, எஸ்-6, எஸ்-7 ஆகிய பெட்டிகளில் தூங்கும் வசதியுடன் இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Fbck8tL
via

No comments