Breaking News

பள்ளி கட்டிடங்களுக்கு அனுமதி பெற அவகாசம் நீடிக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: பள்ளி கட்டிடங்களுக்கான கட்டிட அனுமதி பெற கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிகுலேஷன், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார், முதல்வருக்கு அனுப்பிய மனு: தமிழகத்தில் கல்வி நிலையங்கள் கட்டிடஅனுமதி பெறுவதற்கு அரசாணை 76-ன் படிபள்ளி நிர்வாகிகள் ஒரு சதுர அடிக்கு ரூ.7.50செலுத்தி, விண்ணப்பித்து பயனடைந்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்றால் தொடர் விடுமுறை, பொருளாதார மேம்பாடு இல்லாததால் பள்ளிகளில் கல்விக் கட்டணங்கள் அதிக அளவில் நிலுவையில் உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rDxZPN3
via

No comments