Breaking News

மாவட்டங்கள் வாரியாக குற்ற வழக்குகளை ஆய்வு செய்த முதல்வர் - நவீன முறையில் குற்றங்களைத் தடுக்க உத்தரவு

சென்னை: முதல்வரின் தகவல் பலகை தரவுகள் வாயிலாக, மாவட்ட வாரியாக குற்ற வழக்குகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை நவீன முறையில் மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, உள்துறை, போக்குவரத்துத் துறை ஆகிய துறைகளின் முக்கியத் திட்டங்கள், அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் முதல்வரின் தகவல் பலகை தரவுகளின் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Y7R2Usp
via

No comments