FIFA WC 2022 | செனகல் அணியை 3-0 என வீழ்த்தியது இங்கிலாந்து: சாதனை தக்கவைப்பு
அல் ஹோர்: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் செனகல் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இங்கிலாந்து. கால் இறுதி சுற்றில் இங்கிலாந்து அணியானது நடப்பு சாம்பியனான பிரான்ஸுடன் மோதுகிறது.
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் நேற்று நள்ளிரவு தோகாவின் அல் ஹோரில் உள்ள அல் பேத் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து – செனகல் அணிகள் மோதின. 31-வதுநிமிடத்தில் செனகல் ஸ்டிரைக்கர் பவுலேயி டியா மின்னல் வேகத்தில் பந்தை கடத்திச் சென்று இலக்கை நோக்கி வலுவாக உதைத்தார். இங்கிலாந்து டிபன்டர்களின் கவனக்குறைவால் இது கோலாக மாறியிருக்க வேண்டும். ஆனால் கோல் கீப்பர் ஜோர்டான் பிக்ஃபோர்டு அற்புதமாக ஒற்றை கையால் தடுத்துவிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lt4m8hE
Post Comment
No comments