Breaking News

சிறை கைதிகள் வாசிப்பதற்காக தானமாக பெறப்பட்ட 15 ஆயிரம் புத்தகங்கள்

சென்னை: சிறைக் கைதிகள் வாசிப்பதற்காக 15 ஆயிரம் புத்தகங்களை சிறைத்துறை அதிகாரிகள் தானமாக பெற்றுள்ளனர். 46-வது புத்தகக் கண்காட்சி தற்போது சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இங்கு சிறைத் துறை சார்பில் தனி அரங்கு (நுழைவாயில் 5, எண் 286) அமைக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள கைதிகள் படிப்பதற்காக ‘சிறை வாசிகளுக்காக புத்தக தானம் செய்வீர்’ என வலியுறுத்தி ‘கூண்டுக்குள் வானம்’ என்ற தலைப்பில் அரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. புத்தகத்தை தானமாக கொடுக்க விரும்புவோர் 99412 65748 என்ற எண்ணில் அழைத்தால் வீடு தேடிச் சென்று சிறைத் துறையினர் பெற்று வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fEb7y4d
via

No comments