Breaking News

சட்டப்பேரவை சபாநாயகர் - ஆளுநர் இடையே முரண்பாடு: 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் ஒரு பிளாஷ்பேக்

‘தி இந்து’ ஆவணக் காப்பகத்திலிருந்து..

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் தனது உரையில் சில வரிகளை படிக்காமல் விட்டதன் தொடர்ச்சியாக, அரசு - சபாநாயகர் - ஆளுநர் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடு அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதேபோன்ற ஒரு ‘பிளாஷ்பேக்’ சம்பவம் சரியாக 50 ஆண்டுகளுக்கு முன் 1972 நவம்பரில் நடந்துள்ளது.அப்போதும் திமுக ஆட்சிதான். முதல்வராக இருந்தவர் மு.கருணாநிதி.அப்போது ஆளுநராக இருந்தவர் கே.கே.ஷா. இப்போது, ஆளுநருக்கு எதிராக முதல்வர் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, பேரவைத் தலைவரின் நடவடிக்கைக்கு எதிராக, முதல்வர் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆளுநர் செயல்பட்டார். இந்த சம்பவத்தை ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் பதிவு செய்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zytsJ0n
via

No comments