Breaking News

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு - மத்திய சட்ட ஆணையத்துக்கு பழனிசாமி கடிதம்

சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி, மத்திய சட்ட ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அடிக்கடி தேர்தல் நடத்துவதால் அதிக செலவாகிறது. மேலும், அரசு நிர்வாகம் மற்றும் மக்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று கூறி, மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் `ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு, மத்திய சட்டத் துறையின் நாடாளுமன்றக் குழு, மத்திய சட்ட ஆணையத்தை அறிவுறுத்தி உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YQpJWjK
via

No comments