Breaking News

6-வது நாளாக தொடரும் போராட்டம் | மருத்துவ கல்வி இயக்குநரகம் முற்றுகை - ஒப்பந்த செவிலியர்கள் கைது

சென்னை: பணி நிரந்தரம் செய்யக் கோரி, 6-வது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்த ஒப்பந்த செவிலியர்கள், மருத்துவக் கல்வி இயக்குநரகத்தை முற்றுகையிட்டதால் கைது செய்யப்பட்டனர்.

கரோனா தொற்று காலத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒப்பந்தம் அடிப்படையில் தற்காலிக செவிலியர்களாக நியமிக்கப்பட்டனர். ஒப்பந்த காலத்துக்கு பின்னர், அவர்களில் 3 ஆயிரம் பேருக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டது. இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படாததால் சுமார் 800 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nNZcdkw
via

No comments