தமிழக கடற்கரையோரங்களில் கிடைக்கும் கனிமங்களை சந்தைப்படுத்த ஒப்பந்தம்: முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது
சென்னை: கடற்கரையோரங்களில் கிடைக்கும் கனிமவளத்தை வணிகரீதியில் பிரித்தெடுத்து, சந்தைப்படுத்த தமிழ்நாடு கனிம நிறுவனம், ஐஆர்இஎல் (இந்தியா) நிறுவனம் இடையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கிடைக்கக்கூடிய கனிம வளங்களை விஞ்ஞானரீதியாகவும், சுற்றுச்சூழல் மாசுபடாதவாறும் எடுக்க வேண்டும், அதன் மூலம் பல்வேறு உபதொழில்கள் தொடங்கி தொழில்வளத்தைப் பெருக்க வேண்டும், கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பது முதல்வர் ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வையாகும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bIWXTmA
via
No comments