Breaking News

வரதட்சிணை வழக்கு | ஐபிஎஸ் அதிகாரி சமரசம் கோரியதை ஏற்று ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வரதட்சிணை கோரிய வழக்கில் தமிழக காவல்துறை அதிகாரி வருண்குமார் தாமாக முன்வந்து சமரசம் செய்ய கோரியதை ஏற்ற உச்ச நீதிமன்றம், 11 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது.

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி. இவர், கடந்த 2011-ம் ஆண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், ஐஏஎஸ் தேர்வில் பங்கேற்பதற்காக தனியார் பயிற்சி மையத்தில் பயின்றபோது வருண்குமார் என்பவரை சந்தித்தேன். இருவரும் காதலித்தோம். திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். இருவர் வீட்டிலும் எங்கள் முடிவை ஏற்றுக்கொண்டனர். 2010-ல் நடந்த தேர்வில் வருண் குமார் வெற்றி பெற்றார். அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட செலவுகளை சமாளிப்பதற்காக எனது நகைகளை அடமானம் வைத்து வருண்குமாருக்கு பணம் கொடுத்தேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OKm1vjg
via

No comments