Breaking News

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு: ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்

சென்னை: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், சிதம்பரம் நடராஜர்கோயில், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில், சுசீந்தரம் தாணுமாலய சுவாமி, ஆஞ்சநேயர் கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், கும்பகோணம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமிகோயில், மருதமலை முருகன் கோயில், காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயில், திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில், திருபரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிகோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/coIhdV5
via

No comments