Breaking News

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக பிஎஃப்ஐ நிர்வாகியிடம் என்ஐஏ விசாரணை

பழநி: கோவை கார் சிலிண்டர் குண்டு வெடிப்பு குறித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மதுரை மண்டலத் தலைவர் முகமது கைசரிடம் என்ஐஏ அதிகாரிகள் பழநி காவல் நிலையத்தில் 2-வது நாளாக விசாரணை நடத்தினர்.

பழநியில் உள்ள திருநகரைச் சேர்ந்தவர் முகமது கைசர்(50). இவர் பழநியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவர், தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவராகப் பொறுப்பு வகித்தார். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் பழநி தொகுதியில் போட்டியிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hpxYd0C
via

No comments