Breaking News

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் சூடுபிடிக்கிறது - பாஜக தலைவர் அண்ணாமலையுடன் இபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் சந்திப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொடர்பாக, இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரினர்.

வரும் பிப். 27-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் இத்தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சி மேலிடத்தின் அறிவுறுத்தலைப் பொறுத்து, பாஜக நிலைப்பாடு தெரிவிக்கப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4oHuZj7
via

No comments