Breaking News

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டி உறுதி - கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார் ஓபிஎஸ்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தொடர்ந்து, கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. ஓரிருநாளில் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார். அதேபோல, அதிமுக கூட்டணியில் பழனிசாமி தரப்புபோட்டியிடுவதும் உறுதியாகியுள்ளது. இதற்காக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆதரவைக் கோரும் பணிகளை மூத்த நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக போட்டியிட தமாகா ஆதரவு தெரிவித்துவிட்டது. டிடிவி தினகரன் வரும் 27-ம் தேதி தனது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZNK30lF
via

No comments