Breaking News

மலையக தமிழர்கள் நலனுக்கு முக்கியத்துவம் தருவதில்லை: இலங்கை எம்.பி. மனோ கணேசன் வருத்தம்

சென்னை: இலங்கையைச் சேர்ந்த தமிழ் முற்போக்கு கூட்டணி அமைப்பின் தலைவரும், அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கையில் சுமார் 30 லட்சம் தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் ஈழத் தமிழர்கள், தெற்குப் பகுதியில் உள்ள மலையகத் தமிழர்கள் 50 சதவீதம் உள்ளனர்.

ஆனால், இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் உட்பட அனைவரும் ஈழத் தமிழர்கள் நலன் பற்றியேபெரிதும் பேசி வருகின்றனர். அங்குள்ள மலையகத் தமிழர்களின்நிலையை யாரும் கண்டுகொள்வதில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் உள்ள மதுரை,புதுக்கோட்டை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து இலங்கைக்கு தொழிலாளர்களாகஅழைத்துச் செல்லப்பட்டவர்கள்தான் மலையகத் தமிழர்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OiYtpcI
via

No comments