Breaking News

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு

சென்னை: அரையாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் இன்று (ஜனவரி 2) திறக்கப்படுகின்றன. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு மற்றும் 2-ம் பருவத்தேர்வு கடந்த டிசம்பர் 16 முதல் 23-ம் தேதி வரை நடைபெற்றது.

தொடர்ந்து அரையாண்டு விடுமுறை டிசம்பர் 24-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதற்கிடையே அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி ஜனவரி 2, 3, 4-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. எனவே, ஆரம்பப் பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AFfTEDL
via

No comments